vacancy
July 13, 2020
இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கையில் தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக கூறினார்.
இதற்காக 6,500 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 28ம் திகதி நடைபெறும்.
இதேவேளை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும் பரீட்சைத் திணைக்களம் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். (GID)


















