Breaking

Thursday, February 28, 2019

டிஜிட்டல் பொருளாதார முறையை அமுல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை


டிஜிட்டல் பொருளாதார முறையை அமுல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ், கம்பஹா கனேமுல்ல ஹேமமாலி வித்தியாலயத்தில் இரண்டு மாடி தொழில்நுட்ப கட்டிடடத்தை இன்று திறந்து வைத்த பிரதமர், இதற்கு அமைச்சரவையின் இணக்கியிருப்பதாகவும் கூறினார். 

அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனூடாகவே டிஜிட்டல் பொருளாதாரம் சாத்தியமாகும் என்றும் கூறினார். 

உலகளாவிய பொருளாதாரத்துடன் முன்னோக்கி பயணிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் அவசியம். இதற்காக பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்தி டிஜிட்டடில் பொருளாதாரத்திற்கு தேவையான டிஜிட்டல் கல்வி முறையினை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

நாட்டின் சகல பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்களுக்காக டெப் கணனிகள் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறான மேம்பட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை பெற்ற கடனை மீளச் செலுத்த முடியும். 

இதன்மூலம் ஏற்றுமதியின் ஊடாக பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டு முடியும். இந்தாண்டு அதிகளவிலான வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இலங்கை பெற்ற வெளிநாட்டு கடன்களை செலுத்த இவ்வாறான டிஜிட்டல் பொருளாதார முறை அவசியமாகிறது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments:

Post a Comment