Breaking

Sunday, March 3, 2019

இலங்கையின் புதிய வரைபடம் தயார்!


இலங்கையின் புதிய வரைபடம் இந்த மாதம் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நில அளவைத்திணைக்கள ஆணையாளர் பி.எம்.பி உதயகாந்த தெரிவிக்கையில்
கடந்த ஐந்துவருட காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களினால் பல மாறுதல்கள் கடலிலும்,தரையிலும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்புத்துறைமுகம்,ஹம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் மொரஹககந்த நீர்வீழ்ச்சி, ஆகியவற்றின் அபிவிருத்திகளினாலேயே இலங்கையின் கடற்கரையிலும் தரைப்பகுதியிலும் மாறுதல்கள் ஏற்படக் காரணமாகும்.
அத்துடன் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை புனரமைப்பும் புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய வரைபடத்தை தயாரிப்பதற்கு செயற்கைக்கோள் படங்கள் உதவி செய்தன. முன்னர் தயாரித்த வரைபடத்துக்கு வான்வழி புகைப்படங்கள் பெறப்பட்டன.தற்போதைய வரைபடத்துக்கு மிகவும் துல்லியமான செயற்கைக்கோள் படங்களை எடுத்துள்ளோம்.
எனவே புதிய வரைபடம் மார்ச்மாதம் முடிவடைவதற்குள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment