Breaking

Sunday, February 3, 2019

கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்!


இலங்கையின் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன.
இதற்கென தபால் மூலமோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ இதற்காக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளதுடன் இம்முறை ஒரே தடவையில் 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment