Breaking

Wednesday, July 15, 2020

July 15, 2020

July Exams are cancelled :

Exam department has cancelled the exams which are planned to be held in July 2020. 
2020 ජූලි මාසයේදී පැවැත්වීමට සැලසුම් කර ඇති විභාග අවලංගු කර ඇත.
ஜூலை மாதம் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படவிருந்த பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.


பரீட்சை திணைக்களத்தினால் 2020 ஜூலை மாதம் நடைபெற ஏற்பாடாகி இருந்த கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளின் காரணமாக பிற்போடப்படுகின்றன. பரீட்சை நடைபெறும் தினங்கள் மீண்டும் அறிவிக்கப்படும். 

July 15, 2020

பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்
சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரருக்காக Online மூலமாக விண்ணப்பித்து 48 மணித்தியால காலப்பகுதிக்குள் சான்றிதழை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenet.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அல்லது 011 2784323 என்ற தொலைபேசியின் ஊடாக சான்றிதழ் ஆவண களஞ்சிய பிரிவுடன் தொடர்புகொண்டு அல்லது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Tuesday, July 14, 2020

July 14, 2020

கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள் எவை? வெளியானது தகவல்


கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக முதுகுவலி, குமட்டல், சருமத்தில் தடிப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன.
முன்னர் சளி, இருமல், காய்ச்சல் மட்டுமே கொரோனாவின் அறிகுறிகள் எனச் சொல்லப்பட்டன.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த பின்னர் புதிய புதிய அறிகுறிகள் ஏற்படத் தொடங்கின.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன. இதனுடன் வயிற்றுப்போக்கும் இப்போதெல்லாம் கொரோனா அறிகுறியாகத் தென்படுகிறது. நீரிழிவுநோய் இல்லாதவர்களுக்குக்கூட கொரோனா தொற்றால் சர்க்கரையின் அளவானது 400-ஐ கடந்துவிடுகிறது.
இதையடுத்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) கொரோனா அறிகுறிகளாகப் புதிதாக மூன்றைச் சேர்த்து அறிவித்துள்ளது. அவை முறையே மூக்கு ஒழுகுதல், குமட்டல் தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு.
இதேபோல் ஐசிஎம்ஆர் அமைப்பும் வாசனை அல்லது சுவை தெரியாமல் இருப்பதையும் அறிகுறியாகச் சேர்த்துள்ளது.
பொதுவாக, கொரோனா அறிகுறிகளாகக் காய்ச்சல், சோர்வு, வறட்டு இருமல் ஆகியவை இருக்கும். இதனுடன் சில நோயாளிகளுக்கு உடல்வலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டைக் கரகரப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் அறிகுறிகளாகத் தென்படுகின்றன என்று ஐசிஎம்ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
வயிற்றுப்போக்கு மற்றும் உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் கொரோனா தொற்றைக் கண்டுபிடித்துள்ளோம். சாதாரண காய்ச்சல்கூட தற்போது கொரோனா தொற்றாக மாறிவிடுகிறது
கிராண்ட் மெடிக்கல் காலேஜின் (Grand Medical College)மருத்துவர் ஹேமந்த் குப்தா கூறுகையில், சர்க்கரை அளவு அதிகமாவது கூட கொரோனா தொற்றால் ஏற்படுகிறது. இதனால் அதிக அளவிலான இன்சுலினையும் அவர்களுக்குச் செலுத்த வேண்டியதாக உள்ளது' என்றார்.
July 14, 2020

சுகாதார விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை




எச்சரிக்கை விடுக்கிறது பொலிஸ் திணைக்களம்
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர்அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
July 14, 2020

பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளியன்று தீர்மானம்


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வெ ள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 
இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர்   ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார். 
பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகுமென அவர் குறிப்பிட்டார். 
July 14, 2020

கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்

கொரோனா வைரஸ்  தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்
குண்டசாலை பிரதேசத்தில் கந்தகாடு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணியாற்றிய நபரின் மனைவி மற்றும் மாமனாரும் கொவிட் 19 தொற்று நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாவது, 2020.07.14 திகதி அன்று மாலை 5 மணி அளவில் நிலவிய கொவிட் நிலைமை தொடர்பான சுகாதார சேவைகள பணிப்பாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு...

இன்றைய தினம் வெளிநாட்டிலிருந்து வந்த அதாவது ஓமானிலிருந்து வருகை தந்த மூவர் கொவிட் தொற்று நோயாளிகளாக அடையாளங் காணப்படடுள்ளனர். இதற்கு மேலதிகமாக குண்டசாலை பிரதேசத்தில் கந்தகாடு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணியாற்றிய நபரின் மனைவி மற்றும் மாமனார் ஒருவரும் கொவிட் 19 தொற்று நோயாளியாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதே போன்று லங்கபுரவில் அடையாளங் காணப்பட்ட நோயாளரின் அதாவது கந்தகாடு மத்திய நிலையத்தில் பணியாற்றும் ஊழியரின் மற்றுமொரு உறவினர் கொவிட் 19 நோயாளராக அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இதே போன்று ஆகக் கூடுதலான ரீதியில் பிரச்சினைகள் உள்ள ராஜாங்கனையில் தொடர்ந்தும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மற்றுமொரு நபர் கொவிட் 19 நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளார். விசேடமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் கொவிட் 19 நோயாளரொருவர் அடையாளங் காணப்பட்டால் நாம் அதனை விசேடமாக குறிப்பிடுவோம். இதற்கமைவாகத்தான், இந்த ராஜாங்கனை நோயாளர் குறித்து நாம் தற்போது உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம்.

இருப்பினும் இதுவரையில் இதுகுறித்து சமூக ஊடகங்களில் இது தொடர்பாக பெருமளவில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருப்பதாக அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் கந்தகாடு, சேனபுர மத்திய நிலையத்தில் பணியாற்றியவர்கள் இல்லையாயினும் அந்த மத்திய நிலையங்களிலிருந்து மீண்டும் வீடுகளுக்கு சென்றவர்களை மீண்டும் அழைக்கும் பொழுது அவர்கள் நோயாளர்களாக அடையாளங் காணப்பட்டவர்கள் அல்ல. தனிமைப்படுத்துவதற்காக அழைக்கும் பொழுதே இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் இவ்வாறான பணிகள் பகிரங்கதாக இடம்பெறுவதே ஆகும். இந்த வகையில் மீண்டும் அழைப்பதில் அதாவது உத்தியோகபூர்வ சீருடையிலான இராணுவம் அல்லது பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் அந்த இடங்களில் மேற்கொள்ளும் பகிரங்கமான பணியாகும்.

மீண்டும் அழைக்கும் பொழுது அழைக்கப்படுபவர்கள் கொவிட் 19 நோயாளர்களாக காணப்படுவார்களாயின் அது தொடர்பாக நாம் உடனடியாக அறிவித்து சமூகத்திற்கு தெளிவுபடுத்துவோம். நாட்டிலும் அந்த பிரதேசத்தில் மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது.

இதே போன்று இன்றைய தினம் ராகம பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரியொருவர், கடந்த 1 ஆம் திகதி மற்றொரு வைத்தியசாலையிலிருந்து இந்த வைத்தியசாலையில் இணைந்து கொண்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த மாதம் 21ஆம் திகதி இவர் கந்தகாடு மத்திய நிலையத்தில் ஆலோனை விடயத்திற்காக சென்றுள்ளார். அவ்வாறு சென்று திரும்பிய பின்னர் ஏதேனும் ஒரு வகையில் சிறிய நோய் நிலைக்குட்பட்டுள்ளார். இருப்பினும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 10 ஆம் திகதி வரையில் இந்த தனியார் வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார்.. இதன் பின்னர் கந்தகாடு மத்திய நிலையத்தில் பணியாற்றியதனால் இவர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைவாக இந்த வைத்தியசாலையில் 48 பேர் இன்றையதினம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்பொழுது இந்த வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த PCR பரிசோதனைகளுக்குப் பின்னர் அந்த பரிசோதனையின் அடிப்படையில் இவ்வாறான நோயாளர்கள் பதிவாகவில்லை ஆயின் இந்த வைத்தியசாலை உடனடியாக மீண்டும் திறக்கக்கூடிய நிலைமையுண்டு.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Monday, July 13, 2020

July 13, 2020

இதை செய்யத் தவறினால் ஸ்ரீலங்காவில் இரண்டாவது அலையை தடுக்க முடியாது - வைத்தியர் எச்சரிக்கை


நாட்டில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதாரத் துறையினரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றமையினை மேற்கோள்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தினமும் குறைந்தது 5,000 PCR பரிசோதனைகள் அவசியம். தவறினால் இரண்டாவது அலையை தடுக்க முடியாது
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் நாளாந்தம் 2,500 பி.சி.ஆர். சோதனைகளை பரிந்துரைத்தபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக நாளொன்றுக்கு 500-/ 600 பி.சி.ஆர். சோதனைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
July 13, 2020

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிவித்தல்

கொவிட் 19 நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வதற்க அல்லது ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்போர் கல்வி அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கமான 1988 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 2, 2020

July 02, 2020

அமைச்சரவை தீர்மானங்கள்



2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் சர்வதேச அமைப்புக்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடன் மானியங்கள் மற்றும் பொருட்கள் உதவி என்ற ரீதியில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த பங்களிப்புக்கள் தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உலக வங்கியினால் இலங்கையில் ஏற்பட்ட COVID 19 இன் உடனடித்தேவைக்காக பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்திற்காக 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid 19 அவசர தேவைக்கு பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்தின் கீழ் உடன்பட்டுள்ள தொகையில் 57.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் உடன்பட்ட மொத்த நிதியான 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரையில் நாட்டிற்கு கிடைத்திருப்பது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியது.

இதற்கு மேலதிகமாக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மானியங்கள் மற்றும் அண்ணளவாக சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் மேலே குறிப்பிட்ட தினம் வரையில் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதையும் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

02. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல்

இதுவரையில் மத்திய கலாசார நிதியம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு முடியாதுள்ளது. இந்த நிலைமையின் கீழ் மாதாந்தம் 135 மில்லியன் ரூபா வீதம் திறைசேரியில் மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நிதியத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதியம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற ரீதியில் திறைசேரி தலையீட்டின் அடிப்படையில் குறுகிய கால கடன் தொகையை தேசிய வங்கியொன்றின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கும், எதிர்காலத்தில் நாட்டிற்குள் சுற்றுலா நடவடிக்கைகளை வழமை நிலைமைக்கு கொண்டுவருவதற்கும், மத்திய கலாசார நிதியத்தின் வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் கடன் தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020

2019 / 2020 வருடத்திற்காக சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தபோதிலும், கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக அதற்காக புதிய வழங்குநர்களை தெரிவுசெய்வதற்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாமல் போனது. இதனால், தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமை மற்றும் தற்போதைய சந்தை நிலைமையை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழு சிபாரிசு செய்துள்ள வகையில், 2020.08.01 தொடக்கம் 2021.01.31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சிறைச்சாலை திணைக்களத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தற்போதைய வழங்குநர்களிடம் ஒப்படைப்பதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. உரத்தைக் கொள்வனவு செய்தல் - 2020 (ஜுலை மாதத்திற்காக)

2020 ஜுலை மாதத்தின் தேவைக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் (லக்போர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உர நிறுவனம் (கொமர்ஷல் போர) போன்ற நிறுவனங்களிடம் உர பெறுகையை மேற்கொள்வதற்காக சர்வதேச போட்டி விலைகள் கோரப்பட்டுள்ளன. இந்த விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசை கவனத்தில் கொண்டு கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் உரத்தை வழங்குபவர்களிடம் கொள்வனவு செய்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• ஒரு மெற்றிக் தொன் 260 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் 9இ000 10, 5% மெற்றிக் தொன் யூரியாவை (கிரனியுலர்) கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Agri Commodities and Finance FZE என்ற நிறுவனத்திடம் வழங்கல்.

• ஒரு மெற்றிக் தொன் 249.07 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் ரிபல் சுபர் பொஸ்பேட் 6000 மெற்றிக் தொன்னை 10 5% கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Aries Fertilizers Group Pvt Limited என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

05.மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல்

2019 டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்திற்கு அமைவாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை மீண்டும் கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைப்பதற்காக தற்பொழுது தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சின் நடவடிக்கைகளை, முன்னெடுப்பதற்காக அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை மீள தயாரித்து மின்சார கட்டமைப்பை செப்பனிட வேண்டியுள்ளது. இந்த பணிகளை மிக விரைவில் மேற்கொண்டு பூர்த்தி செய்வதற்கு தேவை இருப்பதினால் இதனை செப்பனிடுவதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தம், பொறியியல் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்திற்கு (CECP) நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை (தனியார்) (central Engineering Services (Pvt) Limited) நிறுவனத்திற்கும் நேரடியாக வழங்குவதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய பணிகளுக்காக கொள்வனவு செய்வதற்கு வசதிகளை செய்தல்

தற்பொழுது நடைமுறையிலுள்ள உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரையிலான நெல் உற்பத்திக்காக உர நிவாரணத்தின் கீழ் உரம் வழங்கப்படுவதுடன் இதற்கு மேலாக கூடுதலான நிலப்பரப்பிற்கு தேவையான உரத்தை பகிரங்க சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டும். இந்த நிலைமையின் கீழ் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு சந்தைகளில் ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்கு தட்டுப்பாட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேடமாக கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பு அதிகரித்ததினால் உரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, அரசாங்கம் சிரமத்திற்குள்ளாகாத வகையில் விவசாயிகளுக்கு தேவையான மேலதிக உரத்தை கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கத்தின் உர நிறுவனத்தினால் நெல் உற்பத்திக்கான உரத்தை உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதில் எஞ்சியிருக்கும் உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களின் மூலம் கொள்வனவு செய்து 50 கிலோ எடையைக் கொண்ட உரப்பொதியொன்று 1000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

07. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி - ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர் இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபன மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திட்டம்

வரையறுக்கப்பட்ட சம்சன் ரஜரட்ட டைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்படும் ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தினால் இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொழிற்சாலை தயாரிப்பு நடவடிக்கைகள் லங்கா பீங்கான கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. ப்ரோட்லேன்ட் மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஆலோசனை சேவைக்காக பொறியியல் பணிகள் தொடர்பிலான மத்திய ஆலோசனை செயலக (CECB) உடன் இருந்த ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை நீடித்தல்

ப்ரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்த பொறியியலாளர் பணிகள் தொடர்பான விடயங்கள் மத்திய ஆலோசனை செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டத்திற்கு எதிராக பிரதேசத்தில் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு, காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டமை, உபகரணங்களை விநியோகிக்கும் தயாரிப்பாளர் மற்றும் கடன் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டமை போன்ற காரணங்களினால் திட்டமிட்ட வகையில் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்துடன் (CECB) உள்ள ஆலோசனை சேவை ஒப்பந்தத்தின் உடன்படிக்கைக் காலத்தை நீடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்த ஆலோசனைக்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. 2020 / 2021 கால எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமான துறை காப்புறுதியை புதுபித்தல் மற்றும் நிறுவுதல்

விமான சேவையின் நடவடிக்கைக்கான விமான துறை காப்புறுதி மிக அவசியமான தேவையாவதுடன் வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறவனத்தினால் இந்த காப்புறுதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2018 ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வருடாந்தம் புதுபிக்கப்பட வேண்டும், அத்தோடு 2020 / 2021 ஆம் ஆண்டுக்கான காப்புறுதி இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிலையான தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்யும் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட காப்புறுதி 4.05 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை

சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் (MCC) கைச்சாத்திடுவதற்கான உத்தேச உடன்படிக்கை தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் லலித ஸ்ரீ குணவர்தன அவர்களின் தலைமையின் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கௌரவ பிரதமர் அவர்களினால் இந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள சிபாரிசுகள் தொடர்பாக அமைச்சரவையின் அனைத்து அங்கத்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.

12. ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமான சௌபாக்யே இதிரி தெக்ம – சௌபாக்கியத்தின் எதிர்கால நோக்கில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காத்தொடுவ - இங்கிரிய - இரத்தினபுரி – பெல்மடுல்ல தொடக்கம் இணைப்புக்களை ஏற்படுத்தி ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு நிதியில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இந்த உள்ளுர் நிதியின் கீழ் நிர்மாணிப்பதன் மூலம் நாட்டிற்கு மிகவும் சிறந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிந்திருப்பதாக தெரிகிறது. இதற்கமைவாக உள்ளுர் வங்கியின் மூலம் பெறப்படும் நிதியைப் பயன்படுத்தி தேசிய நிர்மாண நிறுவனங்களின் சேவையைப் பெற்று இதன் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்ற ரீதியில் கருதப்படும் காணிப்பகுதியை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதல்

வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படாத பிரதேச செயலாளரின் கீழ் நிருவகிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் எஞ்சிய வனம் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளில் நிருவாகம் அதனுடனான வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள 2001.08.10 ஆம் திகதி இலக்கம் 05 / 2001 சுற்றரிக்கையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்படுத்தப்படும். இந்த சுற்றறிக்கையில் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த காணி ஏனைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமாயின் அதற்காக நீண்ட நடைமுறையொன்று கடைபிடிக்க வேண்டும் என்பதினால் இதில் எஞ்சிய காடுகளில் சேனை பயிர்ச்செய்கை போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அந்த காணி பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அமைச்சரவையின் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து எஞ்சிய வன பகுதி மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த காணிகளின் உரிமையை தொடர்ந்தும் அரசாங்கம் கொண்டுள்ள வகையில் முன்னெடுத்து தற்காலிகமாக மாற்று நடவடிக்கைக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கென பொருத்தமான நடைமுறையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சரிடம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது