Breaking

Thursday, May 28, 2020

ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் ராக்கெட்டுக்கு என்ன ஆனது???

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் நாசாவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.






 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதல் சுற்றுவட்ட பயணமாக இது இருந்து இருக்கும்.

டக்ளஸ் ஹர்லி  மற்றும் ரொபர்ட் பென்ஹென் ஆகிய இரு நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று (27.05.2020)  சரியாக 4.33 பி.ப EDT, மணிக்கு புறப்பட ஆயத்தமாக இருந்தனர்.


அனால் ராக்கெட் புறப்பட இருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்ப இருந்தது. இத்திட்டம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கண்டுபிடிப்பாளர் மற்றும் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் ஆவார். இவரது நிறுவனமே உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஆகும்.


இவ்விண்கலம் எதிர்வரும் சனிக்கிழமை ஏவப்படுவதற்கான அடுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment